தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக புனிதப் பயணம் சென்று இருந்த இஸ்லாமியர்கள் நாடு திரும்பினர்!
தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்களில்
முதற் கட்டமாக 275 பயணிகள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 24ம் திகதி முதல் 42 ஆயிரம் புனித யாத்திரிகர்கள் அடுத்தடுத்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் தங்களது புனித பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் நாடு திரும்ப ஆரம்பித்து உள்ளனர்.
முதற் கட்டமாக இன்று 275 பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். அடுத்தடுத்து மற்றவர்கள் நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
ஹஜ் யாத்திரிகர்கள் தங்களது பயணம் சிறப்புற அமைந்து இருந்தது என்று ஆனந்த கண்ணீரோடு கூறியுள்ளனர். இவர்களை வரவேற்க, அவர்களது உறவினர்கள் முன்கூட்டியே விமான நிலையத்தில் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த செப்டெம்பர் மாதம் 24ம் திகதி முதல் 42 ஆயிரம் புனித யாத்திரிகர்கள் அடுத்தடுத்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் தங்களது புனித பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் நாடு திரும்ப ஆரம்பித்து உள்ளனர்.
முதற் கட்டமாக இன்று 275 பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். அடுத்தடுத்து மற்றவர்கள் நாடு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
ஹஜ் யாத்திரிகர்கள் தங்களது பயணம் சிறப்புற அமைந்து இருந்தது என்று ஆனந்த கண்ணீரோடு கூறியுள்ளனர். இவர்களை வரவேற்க, அவர்களது உறவினர்கள் முன்கூட்டியே விமான நிலையத்தில் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Category: மாநில செய்தி
0 comments