.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! கலெக்டர் தரேஸ் அஹமது.

Unknown | 2:52 PM | 0 comments

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர்  தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விண்ணப்பப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்தவராக, அதாவது 30.9.2009-க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாமல் தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.9.2014 தேதியில் 45 வயதைக் கடந்தவராகவும், மற்ற வகுப்பினர்கள் 40 வயதைக் கடந்தவராகவும் இருக்கக் கூடாது.

மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமலும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியாகவும் இருக்கக் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருக்கக்கூடாது. புதிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2014-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1-க்குள் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெறுபவர்கள், நிகழாண்டுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தை 30.11.2014-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1