துபாயில் உள்ளது போல சென்னையில் பயணிகளுக்கு குளிர்சாதன பேருந்து நிலையம்! விரைவில்!
சென்னையில் கிண்டி உள்ளிட்ட 3 இடங்களில் பயணிகள் ஓய்வெடுக்கவும், பேருந்துக்காக காத்திருக்கவும் குளிர்சாதன வசதிக்கொண்ட பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று, மாநகரப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கிண்டி, கத்திப்பாரா உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்த குளிர்சாதன வசதிக்கொண்ட மற்றும் நல்ல இருக்கைகள் கொண்ட பேருந்து நிலையங்களை இந்த வருட இறுதிக்குள் அமைத்து, அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்த பேருந்து நிலையம் பயணிகளின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று கண்டோன்மென்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்தப் இருந்து நிலையங்களில் வங்கிகளுக்கு ATM மையம் அமைக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிய வருகிறது. இதுவரை சென்னையில் குளிர்சாதன வசதி மற்றும் இருக்கைகள் கொண்ட பேருந்து நிலையங்கள் இல்லை என்று கூறலாம்.
Category: மாநில செய்தி


0 comments