.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை, பேரளி பகுதி அரசுப் பள்ளிகளில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு!

Unknown | 12:28 AM | 0 comments

பெரம்பலூர், ஜூலை 4:
பெரம்பலூர் மாவட்டம், எசனை, பேரளி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நேற்று நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய கலெக்டர் தரேஸ் அஹமது மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்ட பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, பெரம்பலூர் அடுத்த எசனையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு நேற்று சென்றார். அங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளிடம் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.
பின்னர் அவர்களுக்கு சில வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதச் சொல்லியும், சில கணக்குகளை கொடுத்து தீர்வு காணச் சொல்லியும் கேட்ட கலெக்டர், முதலில் எழுதி முடித்த மாணவ, மாணவிகளுக்கு, பரிசுக ளை வழங்கிப் பாராட்டினார்.பின்னர், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற கலெக்டர், அங்குள்ள 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம், நேற்று வெளிவந்த தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களைக் கொடுத்து படிக்கச் சொல்லிக் கேட்டார். அதன் பின்னர், மாணவ, மாணவிகளுக்கு சரளமாக எழுதும் திறனையும், படிக்கும் திறனையும் வளர்க்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார்.ஆய்வின் போது மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித் திட்டஅலுவலர் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய உதவித் தொடக்க, கூடுதல் உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1