.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பொறியியல் படிப்பில் 1.76 லட்சம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்- அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்!!

Unknown | 9:35 PM | 0 comments

பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பில் விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக் கான கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளி களுக்கான கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன் கிழமை நடந்தது.

தரவரிசைப் பட்டியலில் முத லிடம் பெற்ற கார்த்திக், இரண் டாம் இடத்தைப் பிடித்த இந்துமதி, மூன்றாம் இடம் பெற்ற சபரிபிர காஷ் ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

1.76 லட்சம் இடங்கள்

பொது கவுன்சலிங் மூலமாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. அதன்படி, அவர்களுக்கு 5,021 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 385 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 305 பேர் தகுதிபெற்றனர்.

பொறியியல் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபற்றிய அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.

கவுன்சலிங் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொது கவுன்சலிங் நாளை தொடக்கம்

விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்ச லிங் நடந்து முடிந்துள்ள நிலை யில், பொதுவான கவுன்சலிங் (அகடமிக்) நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் தேதி, நேரம் ஆகிய விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அழைப்புக் கடிதமும் எஸ்.எம்.எஸ். தகவலும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கவுன்சலிங் ஜூலை 28-ம் தேதி நிறைவடைகிறது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1