பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 8ம் தேதி ஊர்க் காவல் படைக்கு ஆட்கள் தேர்வு!
பெரம்பலூர் மாவட்ட ஊர்க் காவல் படைக்கு ஜனவரி 8ம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் எஸ்பி சோனல் சந்திரா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகிய இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு ஜனவரி 8ம் தேதி காலை 9 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 20 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், இத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவிலான 2 புகைப்படங்கள், அசல் மற்றும் நகல் சன்றிதழ்களுடன் நேரில் வந்து பங்கேற்கலாம் என்றார்.
Category: மாவட்ட செய்தி


0 comments