சென்னையில் அடுத்த வாரம் முதல் காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் !
சென்னை: இனிமேல் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார், டாக்சி, வேன் விபத்துகளில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்து உள்ளனர். சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதால் சிறிய விபத்துக்களில் கூட டிரைவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த டிரைவரை நம்பி கார், டாக்சி, வேன் போன்றவற்றில் பயணம் செய்பவர்களும் பலியாகிறார்கள்.தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ஸீ 100 அபராதம் வசூல் செய்யப் படும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரை வர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Category: மாநில செய்தி


0 comments