வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை மற்றும் வரும் 27ஆம் தேதி சிறப்பு முகாம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த, நீக்கம், பாகம் மாற்றம் செய்ய ஞாயிற்றுக்கிழமை (அக். 20) மற்றும் அக். 27-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1.1.2014-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர்களை திருத்தம், நீக்கம், பாகம் மாற்றம் செய்ய அக். 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.வாக்குச்சாவடி மையங்களில் (பள்ளிகளில்) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் பெறப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சோந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
Category: மாவட்ட செய்தி


0 comments